×

‘’காதலிக்கும் விஷயத்தை வெளியிடுவேன்’’ என்று மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தாயின் 2வது கணவருக்கு வலை

பெரம்பூர்: காதலிக்கும் விஷயத்தை தெரிவித்துவிடுவேன் என்று மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாயின் 2வது கணவரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த மாதம் திடீரென மாணவி மாயமானார். இதுகுறித்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின்படி, செம்பியம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் மாணவி, அவரது காதலன் ஆகியோரை மீட்டனர். இதன்பிறகு மாணவியை தாயிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்த தகவல் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் லலிதாவுக்கு தெரியவந்ததும் அவர் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்படி இன்ஸ்பெக்டர் அம்பிகா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியபோது மாணவியின் தாய் பல வருடங்களுக்கு முன்பே கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்துவிட்டதாகவும் இதன்பிறகு காட்வின் என்பவரை 2வது திருமணம் செய்துகொண்டதாகவும் கடந்த 2021ம் ஆண்டு மாணவி, வாலிபரை காதலிப்பதை தெரிந்துகொண்ட காட்வின் அந்த மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனை வெளியே சொன்னால் எனது தாயிடம் ெதரிவித்து விடுவேன் என்று மிரட்டியும் தொல்லை கொடுத்துள்ளார் என்று தெரியவந்தது. இதையடுத்து செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், மாணவியின் தாயின் 2வது கணவர் காட்வின் மற்றும் மாணவியின் காதலன் ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர். இதில் மாணவியின் தாய்க்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்துகின்றனர்.

The post ‘’காதலிக்கும் விஷயத்தை வெளியிடுவேன்’’ என்று மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தாயின் 2வது கணவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Perampur ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு